Translate

Thursday, March 2, 2023

total hip replacement in tamil: இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தமிழில் மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 

இடுப்பு மூட்டைப் பற்றியும்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றியும்  புரிந்துகொள்ளுதல்:

    ஆரோக்கியமான இடுப்பு:

                                      நமது உடலில் மூட்டுகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேலான எலும்புகளின் முனைகள் சந்தித்துக்கொள்ளும் ஒரு அமைப்புகளாகும். இடுப்பு ஒரு " பந்துகிண்ண " மூட்டு ஆகும்.   

தொடை எலும்பின் மேல் முனை தான் அந்த பந்து. அது இடுப்புப் பகுதியிலுள்ள கிண்ணத்தோடு இணைகிறது.

சைனோவியம் என அழைக்கப்படும் அந்த மூட்டிலுள்ள படலம் அந்த மூட்டில் உராய்வு ஏற்படுவதை தடுப்பதற்கான உயவூட்டும் திரவத்தை தயாரிக்கிறது. குருத்தெலும்பு, எலும்புகளின் முனைகளை சுற்றியமைந்து, இடுப்பு மூட்டு மென்மையாகவும், எளிதாகவும் செயல்படுவதற்கான மெத்தை போன்று செயல்படுகிறது.

இடுப்பு தான் அதிகப்படியான எடையை தாங்கும் மூட்டுப் பகுதியாகும்.

இதனால் உங்கள் கால்களை மடக்கவும் நீட்டவும் அனுமதிக்கும் தசைகளும், பிணைத்தசைகளும் ஆதரவளிப்பதால் உங்களால் நடக்கவும் படிகளில் ஏறவும் முடிகிறது.

 

இடுப்பு பந்து கிண்ண மூட்டு பிரச்சினைகள்

 

       நோய்வாய்ப்பட்டுள்ள இடுப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ள இடுப்பு சாதாரண அசைவுகளைக் கூட வலியுடையதாக மாற்றிவிடக்கூடும்.மற்றும் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தையும் கெடுத்து விடும்.

 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையாளர் சேதப்பட்டுள்ள அல்லது நோய்வாய்ப்பட்டுள்ள உங்கள் இடுப்பு மூட்டுப் பகுதியை நீக்கிவிட்டு ஒரு புதிய செயற்கைரீதியாக தயாரிக்கப்பட்ட உறுப்புகளை உள்வைக்கும் முறையாகும்.

 

 

இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய பொதுவான காரணங்கள்:

 பின்வருபவை இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய காரணங்களாகும்:

 

 

1. ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் -இது மூட்டுகளிலுள்ள குருத்தெலும்பு மூட்டுக்களில் உங்கள் மூட்டுகளின் முனைகளை சுற்றிப் பாதுகாக்கும் வளைந்து கொடுத்து மடங்கக்கூடிய இணைப்புத் திசு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து, எலும்புகளின் மேற்பரப்புகள் ஒன்றோடொன்று நேரடியாக உராசி தேயச்செய்கிறது.

 

2. முடக்கு வாதம் ருமட்டாய்டு  ஆர்த்ரைட்டிஸ் தமது சொந்த உடலின் அணுக்கள் மற்றும் திசுக்களை தடுப்பாற்றல் மண்டலம்

தாக்குவதால் ஏற்படும் ஒரு நோயாகும். முடக்கு வாதம் உள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் எந்தவித பாரமும் கொடுக்கப்படாமல் ஓய்வு நிலையில் இருக்கும் போது கூட தீவிரமான வலியை அனுபவிப்பார்கள்.

  

3. காயம்-விபத்து அல்லது காயம். மூட்டு விலகுதல் மற்றும் மூட்டு எலும்பு பகுதிகள் உடைந்த பிறகு வரும் தேய்மானம்.

 

4. ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ்-இது எலும்புத் திசுக்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதால் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும்.

 

 

 

 

       பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு:

    இயல்பாக முதுமைப் படுவதால் ஏற்படும் தேய்மானம் மற்றும் கிழிதல் ஆகிய காரணங்களால் அல்லது ஒரு விபத்தினால் இடுப்பில் பாதிப்பு ஏற்படலாம்.

பொதுவாக இடுப்பு பாதிப்பு பந்துக் கிண்ண மூட்டில் ஏற்படும்.

சேதமடைந்துள்ள இடுப்பு மிகவும் வலி உள்ளதாகவும் மற்றும் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையும் குறைத்து விடலாம். 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை உங்களுக்கு எப்படி உதவும்?

நோய்வாய்ப்பட்டுள்ள அல்லது காயமடைந்துள்ள இடுப்பு கடுமையான வலியை ஏற்படுத்தியும், அசைவுகளைக் கட்டுப்படுத்தி மற்றும் வாழ்கையின் தரத்தையும் குறைத்துவிடுகிறது.

 

 

      இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு முக்கியமான தேவைகள்  இருக்கின்றன:

    a. வலி நிவாரணம்.

    b .இடுப்பு மூட்டு செயல்பாடு மேம்படுவதற்கு.

 

a. வலி நிவாரணம்

   குருத்தெலும்பு சேதமடைவதால் இடுப்பில் ஏற்படும் வலிக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிவாரணம் அளித்து வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது. புதிய இடுப்பை வைப்பதன் மூலம் நோய்வாய்ப்பட்டுள்ள   முதலாவதான இடுப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் வலி முடிந்து போகிறது. இது உங்களுக்கு ஒரு சிறந்த நிவாரணத்தை வழங்கி உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

 

b.வாழ்க்கைத் தரம் மேம்படுதல்

      மாற்று இடுப்பை வைப்பதன் மூலம் உங்களால் கூடிய விரைவில் வலியின்றி எளிதாக நடந்து சுற்றி வர முடியும்,  உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்படும். இது வழக்கமான தினசரி செயல்பாடுகளை நீங்களே செய்துகொள்ள உதவும். மேலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷத்துடன் அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.

 

 

         இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தயாராகுதல்

A. உடல் ஆரோக்கியம்

      எந்தவொரு அறுவை சிகிச்சையுடனும் இருப்பது போலவே, இந்த அறுவை சிகிச்சைகாக நீங்களே உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியமாகும்.

     அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு முன்பே புகை பிடிப்பதை நிறுத்திவிட வேண்டும். புகை பிடிப்பதால் மாரடைப்பு, நுரையீரல் சீர்குலைவு, காயம் சேதமடைந்து தொற்றுநோய் ஏற்படுவது முதலிய ஆபத்துக்கள் அதிகரித்து விடுகிறது.

          உங்கள் மேல் கரங்களின் வலிமையை அதிகபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள் செய்வது பயனுடையதாகும்.ஏனென்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மேல் கரங்களை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்துவீர்கள்.

          கூடுதல் எடையை இழத்தல் - அது உங்கள் இடுப்பின் அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். ஆனால் எடையை குறைப்பதற்கான திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். 

 

 

 B. சோதனைகள்:

          உங்கள் மருத்துவர் சில சோதனைகள் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்வார். அது உங்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிட உதவும். இந்த சோதனைகளில் இரத்த பகுப்பாய்வு, கார்டியோகிராம் மற்றும் அவசியமாயிருக்கிற வேறெந்த குறிப்பான சோதனைகளும் உட்படலாம்.

 

C.  மருந்துகள்:

         அறுவைச் சிகிச்சைக்கு முன்பான 7-14 நாட்களில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுப்பதை நிறுத்துமாறு உங்கள் அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். எந்தவொரு மருந்தையும் கைவிடுவதற்கு முன்பாக உங்கள் சிகிச்சை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

D.மற்ற ஆரோக்கியம் தொடர்பான நிலைமைகள்:

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக உங்கள் பற்களுக்கான சிகிச்சை  முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால்- தொற்றுநோயுள்ள பல் அல்லது ஈறு- புதிய இடுப்பில் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.

 

 

உங்களுக்கான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை:

     வழக்கமான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சுமார் 2-3 மணி நேரங்கள் எடுக்கலாம்.

 

      அறுவைச் சிகிச்சை நடைமுறையை வலியில்லாமல் ஆக்குவதற்கும், உங்களுக்கு சௌகரியமானதாக இருக்கச் செய்வதற்கும் அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்கள் மேல் தொடையில் தேவையான அளவுக்கு துவாரமிடுகிறார்.

 

     அதன் பிறகு உங்கள் தோலுக்கு அடியிலுள்ள பிணைப்புத்தசைகள் மற்றும் தசைகளை தனித்தனியாக பிரிக்கிறார்.அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் சாக்கெட்டிலிருந்து தொடை எலும்பின் தலைப் பகுதியை பந்து கிண்ணத்திலிருந்து தனியாக பிரித்தெடுக்கிறார்.

  

  அந்த கிண்ணப் பகுதியிலிருந்து குருத்தெலும்பு நீக்கப்படுகிறது.மற்றும் அது செயற்கை உறுப்பு கிண்ணப் பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு  வடிவு படுத்தப்படுகிறது.புதிய செயற்கை உறுப்பின் இந்தப் பகுதி வளைக்கப்பட்டு பிளாஸ்டிக் அல்லது செராமிக் கொண்டு முலாம் பூசப்பட்டிருக்கிற ஒரு உலோகத் துண்டாகும்.

 

   தொடை எலும்பின் தலைப் பகுதியை வைப்பதற்காக,முதலில் தொடை எலும்பின் தலைப் பகுதி பொருந்தும் வகையில் அந்தத் தொடை எலும்பை துளையிட்டு தொடை எலும்புக்கான தலைப்  பகுதியை வைக்கிறார்.

         தொடை எலும்பின் தலைப்பகுதிக்கு மாற்றாக ஒரு உலோக அல்லது செராமிக் பந்து அந்த எலும்புத் தண்டுடன் இணைக்கப்படுகிறது.

     அந்த செயல்முறை முடிந்தவுடன் அறுவைச் சிகிச்சைக்கான உலோக தைப்புக் கம்பிகளை வைத்து தையல் போடவும். அது அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 10-14 நாட்களில் நீக்கப்படுகிறது.

 

மருத்துவமனையில் குணமடைதல்:

        அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு

    நீங்கள் எழுந்திருக்கும் வரை நலம்பெறும் அறையில் இருப்பீர்கள்.

                  உங்கள் புதிய இடுப்பைப் பாதுகாக்க உங்கள் முட்டிகளுக்கு இடையில் ஒரு தலையணை வைக்கப்படும்.

          இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்காக உங்கள் கால்களுக்கு உறைகள் வழங்கப்படும்.

 மருத்துவமனையில் தங்கியிருத்தல்

      மருத்துவமனையில் தங்கியிருப்பது 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கலாம்.

             உங்களுக்கு கொஞ்சம் வலி இருக்கும் எனவே வலிக்கான மருந்துகள் கொடுக்கப்படும். இது உங்கள் வலியை குறைத்து முடிந்தவரை சௌகரியமாக உணரச் செய்யும்.

             ஆரம்ப கட்டத்தில், நீங்கள் குணமடைவதற்காக அசைந்து செயல்படுவது முக்கியமானதாகும்.

அசைவது பின்வருபவைக்காக உதவும்:

           1. வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

           2. நிமோனியா மற்றும் இரத்த உறைவுகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

 

 

ஒரு இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அடுத்த நாளன்று உங்களை சந்தித்து மாற்றி வைக்கப்பட்ட இடுப்பில் நீங்கள் எவ்வளவு எடை போட வேண்டும் என்று உங்களுக்கு கற்பிப்பார்.

 

 நீங்கள் சுதந்திரமாக நடக்கவும்; நாற்காலி, கார் போன்றவற்றில் உட்கார்ந்து எழுந்திருப்பதற்காகவும்; மாடிகளில் ஏறி இறங்குவதற்காகவும் ஒரு ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதும் உங்களுக்கு கற்பிக்கப்படும்.

 

வீட்டில் குணமடைதல்

   மருத்துவமனையிலிருந்து வெளியனுப்பப்படும் போது, நடத்தல்,படுக்கையில் படுத்தல் மற்றும் எழுந்திரித்தல், கழிவறைக்கு செல்லுதல் ஆகிய செயல்பாடுகளை உதவியின்றி செய்வதற்கு கொஞ்சம் வலிமையைப் பெற்றிருப்பீர்கள்.

   உங்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிற படி மருந்துகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறீர்கள்  என்பது முக்கியமானதாகும்.

       இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist )  வழிகாட்டப்பட்டியா படி  ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனம் உபயோகித்து நடப்பதை தொடருங்கள். எடையை தாங்கிக்கொண்டு முடிந்தவரை சௌகரியமாக நடங்கள், நடப்பது தசைகளை வலிமைப்படுத்தும்.

    மருத்துவமனையில் செய்து கொண்டிருந்ததைப் போல உடற்பயிர்ச்சிகளைத் தொடருங்கள்.

 

A. வீட்டுக்கு திரும்பிய பிறகு சௌகரியமாக இருப்பதற்கான குறிப்புகள்

   1. உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

   நீங்கள் ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை கொண்டே நடப்பீர்கள் என்பதால், வீட்டைச்  நடப்பது, கடைக்கு செல்வது, சிறு தூரத்திற்கு நடந்து கொடுப்பது அல்லது குளிப்பது ஆகிய வேலைகளைச் செய்வதற்காக உங்களுக்கு

 

உதவி தேவைப்படலாம்.வீட்டுக்கு திரும்பிய பிறகு குணமடைவது சௌகரியமாக இருப்பதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

   2.உங்கள் வீட்டை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்

   நீங்கள் அறுவைச் சிகிச்சைக்காக செல்வதற்கு முன்னால் உங்கள் வீட்டை தயார்செய்து/ ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கம்பிவடங்கள் ஏதும் கீழே கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் படுக்கை அறை மாடியில் இருந்தால், உங்கள் முன் அறையிலேயே படுத்துக் கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இது தினமும் நீங்கள் மாடி ஏறுவதை தவிர்க்க உதவும்.

உங்கள்  இடுப்பு உண்மையான இடுப்பை விட எப்படி வித்தியாசமானது?

பிரச்சனை எழுவதற்கு முன்பாக உங்களால் செய்ய முடிந்ததை விட அதிகமாக செயல்படுவற்கு உதவாது.

   புதிய இடுப்பைப் பெற்ற பிறகு எஞ்சியிருக்கும் உங்களுடைய வாழ்க்கை முழுமைக்கும், காலையில் ஊடுதல் மற்றும் அதிக-தாக்கம் உள்ள விளையாட்டுகளை விளையாடுதல் உட்பட சில செயல்பாடுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியதிருக்கலாம்.ஏனென்றால் அது மூட்டு இட மாறிவிடுவதற்கு  கொண்டு செல்லக்கூடும். இது பற்றி தங்களுக்கு அறுவை செய்த மருத்துவர் அறிவுரை செய்வார்.

 

 நீங்கள் குணமடையும் போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

   நீங்கள் செய்யவேண்டியவை

    1. மருத்துவர்களால் கூறப்பட்டுள்ள படி உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

         2. உங்கள் அறுவைச் சிகிச்சை நபர் வேண்டாம் என கூறும் வரை உங்களுக்கான வெள்ளை கால் உறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

        3.அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

       4.வெட்டப்பட்ட இடத்தில் வீக்கம்,வலி, சிவந்திருத்தல் அல்லது சீல் வடிதல் ஆகியவை இருந்தால் அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவருக்கு தெரிவியுங்கள்.

       5. கட்டுப் போடும் போது, முதலில் அறுவைச் சிகிச்சை செயப்பட்ட இடத்திற்கு கட்டு போடவும்.

    

 

நீங்கள் செய்யக்கூடாதவை

        1. 90 degree கோணத்திற்கு மேல் க்கு இடுப்பை வளைக்காமல் வாழ்க்கையில் நமது வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) கற்பிப்பார்

        2.உங்கள் புதிய இடுப்புக்கு மேல் உயரமாக முழங்காலை தூக்காதீர்கள்.

        3.முழங்காலை அல்லது கணுக்கால்களை பிணைத்து வைக்காதீர்கள்.

        4.எடை பளு தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

        5.அறுவைச் சிகிச்சைக்கு பின்பான முதல் 12 வாரங்களுக்கு கடினமான வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகளை தவிர்த்திடுங்கள்.

        6.முட்டி போடுவதை தவிர்க்கவும்.

        7.குளியல் தொட்டியில் உட்காராதீர்கள்.

       8.வழக்கமான கழிவறையை உபயோகிக்காதீர்கள்; அது கீழாக இருக்கிறது எனவே அது பாதுகாப்பற்றது. Toilet seat raise என்ற ஒரு மாறுதலை வழக்கமாக உபயோகிக்கும் வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு செய்து உபயோகிக்க வேண்டியதின் அவசியத்தை தங்களுக்கு மருத்துவம் புரிய வைப்பார். இந்தியன் டாய்லட் முறையில் கழிவறை உபயோகிப்பது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்             

prophylactic surgery in Orthopaedics? Article by dr Chockalingam எலும்பு மூட்டு மருத்துவத்தில் முன் பாதுகாப்பு அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 click on this link👇👇


Prophylactic orthopaedic surgery (kauveryhospital.com)



👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.  (Click ) செய்யவும் 

paediatric car safety, article by dr chockalingam நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி குறிப்பு மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது


 click on this link👇👇






 Paediatric Car Passenger Trauma – A Case Report and A Review of Child Safety Inside a Car ~ Dr S. Chockalingam (kauveryhospital.com)


👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.  (Click ) செய்யவும் 



kindly go through this article which highlights the importance of child safety while travelling in a car