Translate

Thursday, March 2, 2023

total hip replacement in tamil: இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி தமிழில் மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 

இடுப்பு மூட்டைப் பற்றியும்  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றியும்  புரிந்துகொள்ளுதல்:

    ஆரோக்கியமான இடுப்பு:

                                      நமது உடலில் மூட்டுகள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேலான எலும்புகளின் முனைகள் சந்தித்துக்கொள்ளும் ஒரு அமைப்புகளாகும். இடுப்பு ஒரு " பந்துகிண்ண " மூட்டு ஆகும்.   

தொடை எலும்பின் மேல் முனை தான் அந்த பந்து. அது இடுப்புப் பகுதியிலுள்ள கிண்ணத்தோடு இணைகிறது.

சைனோவியம் என அழைக்கப்படும் அந்த மூட்டிலுள்ள படலம் அந்த மூட்டில் உராய்வு ஏற்படுவதை தடுப்பதற்கான உயவூட்டும் திரவத்தை தயாரிக்கிறது. குருத்தெலும்பு, எலும்புகளின் முனைகளை சுற்றியமைந்து, இடுப்பு மூட்டு மென்மையாகவும், எளிதாகவும் செயல்படுவதற்கான மெத்தை போன்று செயல்படுகிறது.

இடுப்பு தான் அதிகப்படியான எடையை தாங்கும் மூட்டுப் பகுதியாகும்.

இதனால் உங்கள் கால்களை மடக்கவும் நீட்டவும் அனுமதிக்கும் தசைகளும், பிணைத்தசைகளும் ஆதரவளிப்பதால் உங்களால் நடக்கவும் படிகளில் ஏறவும் முடிகிறது.

 

இடுப்பு பந்து கிண்ண மூட்டு பிரச்சினைகள்

 

       நோய்வாய்ப்பட்டுள்ள இடுப்பு அல்லது காயம் ஏற்பட்டுள்ள இடுப்பு சாதாரண அசைவுகளைக் கூட வலியுடையதாக மாற்றிவிடக்கூடும்.மற்றும் வாழ்க்கையில் இருக்கும் சந்தோஷத்தையும் கெடுத்து விடும்.

 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையாளர் சேதப்பட்டுள்ள அல்லது நோய்வாய்ப்பட்டுள்ள உங்கள் இடுப்பு மூட்டுப் பகுதியை நீக்கிவிட்டு ஒரு புதிய செயற்கைரீதியாக தயாரிக்கப்பட்ட உறுப்புகளை உள்வைக்கும் முறையாகும்.

 

 

இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய பொதுவான காரணங்கள்:

 பின்வருபவை இடுப்பு வலி ஏற்படுத்தக்கூடிய மற்றும் இடுப்பு செயல்பாடுகளை இழக்கச் செய்யக்கூடிய காரணங்களாகும்:

 

 

1. ஆஸ்டியோஆர்த்ரைட்டிஸ் -இது மூட்டுகளிலுள்ள குருத்தெலும்பு மூட்டுக்களில் உங்கள் மூட்டுகளின் முனைகளை சுற்றிப் பாதுகாக்கும் வளைந்து கொடுத்து மடங்கக்கூடிய இணைப்புத் திசு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து, எலும்புகளின் மேற்பரப்புகள் ஒன்றோடொன்று நேரடியாக உராசி தேயச்செய்கிறது.

 

2. முடக்கு வாதம் ருமட்டாய்டு  ஆர்த்ரைட்டிஸ் தமது சொந்த உடலின் அணுக்கள் மற்றும் திசுக்களை தடுப்பாற்றல் மண்டலம்

தாக்குவதால் ஏற்படும் ஒரு நோயாகும். முடக்கு வாதம் உள்ள நோயாளிகள் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் எந்தவித பாரமும் கொடுக்கப்படாமல் ஓய்வு நிலையில் இருக்கும் போது கூட தீவிரமான வலியை அனுபவிப்பார்கள்.

  

3. காயம்-விபத்து அல்லது காயம். மூட்டு விலகுதல் மற்றும் மூட்டு எலும்பு பகுதிகள் உடைந்த பிறகு வரும் தேய்மானம்.

 

4. ஏவாஸ்குலர் நெக்ரோசிஸ்-இது எலும்புத் திசுக்களுக்கு இரத்த ஓட்டம் கிடைக்காமல் போவதால் ஏற்படும் ஒரு கோளாறு ஆகும்.

 

 

 

 

       பாதிக்கப்பட்டுள்ள இடுப்பு:

    இயல்பாக முதுமைப் படுவதால் ஏற்படும் தேய்மானம் மற்றும் கிழிதல் ஆகிய காரணங்களால் அல்லது ஒரு விபத்தினால் இடுப்பில் பாதிப்பு ஏற்படலாம்.

பொதுவாக இடுப்பு பாதிப்பு பந்துக் கிண்ண மூட்டில் ஏற்படும்.

சேதமடைந்துள்ள இடுப்பு மிகவும் வலி உள்ளதாகவும் மற்றும் உங்களுடைய வாழ்க்கையின் தரத்தையும் குறைத்து விடலாம். 

இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை உங்களுக்கு எப்படி உதவும்?

நோய்வாய்ப்பட்டுள்ள அல்லது காயமடைந்துள்ள இடுப்பு கடுமையான வலியை ஏற்படுத்தியும், அசைவுகளைக் கட்டுப்படுத்தி மற்றும் வாழ்கையின் தரத்தையும் குறைத்துவிடுகிறது.

 

 

      இடுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு முக்கியமான தேவைகள்  இருக்கின்றன:

    a. வலி நிவாரணம்.

    b .இடுப்பு மூட்டு செயல்பாடு மேம்படுவதற்கு.

 

a. வலி நிவாரணம்

   குருத்தெலும்பு சேதமடைவதால் இடுப்பில் ஏற்படும் வலிக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிவாரணம் அளித்து வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்துகிறது. புதிய இடுப்பை வைப்பதன் மூலம் நோய்வாய்ப்பட்டுள்ள   முதலாவதான இடுப்புடன் சம்பந்தப்பட்டிருக்கும் வலி முடிந்து போகிறது. இது உங்களுக்கு ஒரு சிறந்த நிவாரணத்தை வழங்கி உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கிய நிலையை மேம்படுத்துகிறது.

 

b.வாழ்க்கைத் தரம் மேம்படுதல்

      மாற்று இடுப்பை வைப்பதன் மூலம் உங்களால் கூடிய விரைவில் வலியின்றி எளிதாக நடந்து சுற்றி வர முடியும்,  உங்களுடைய வாழ்க்கைத் தரம் மேம்படும். இது வழக்கமான தினசரி செயல்பாடுகளை நீங்களே செய்துகொள்ள உதவும். மேலும் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தோஷத்துடன் அனுபவிக்க ஆரம்பிக்கலாம்.

 

 

         இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு தயாராகுதல்

A. உடல் ஆரோக்கியம்

      எந்தவொரு அறுவை சிகிச்சையுடனும் இருப்பது போலவே, இந்த அறுவை சிகிச்சைகாக நீங்களே உங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியமாகும்.

     அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் 2 வாரங்களுக்கு முன்பே புகை பிடிப்பதை நிறுத்திவிட வேண்டும். புகை பிடிப்பதால் மாரடைப்பு, நுரையீரல் சீர்குலைவு, காயம் சேதமடைந்து தொற்றுநோய் ஏற்படுவது முதலிய ஆபத்துக்கள் அதிகரித்து விடுகிறது.

          உங்கள் மேல் கரங்களின் வலிமையை அதிகபடுத்துவதற்காக உடற்பயிற்சிகள் செய்வது பயனுடையதாகும்.ஏனென்றால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் மேல் கரங்களை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்துவீர்கள்.

          கூடுதல் எடையை இழத்தல் - அது உங்கள் இடுப்பின் அழுத்தத்தை குறைப்பதற்கு உதவும். ஆனால் எடையை குறைப்பதற்கான திட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக உங்கள் மருத்துவருடன் கலந்து ஆலோசித்துக் கொள்ளுங்கள். 

 

 

 B. சோதனைகள்:

          உங்கள் மருத்துவர் சில சோதனைகள் செய்து கொள்ளுமாறு உங்களிடம் கேட்டுக் கொள்வார். அது உங்களுக்கான அறுவைச் சிகிச்சை செய்ய திட்டமிட உதவும். இந்த சோதனைகளில் இரத்த பகுப்பாய்வு, கார்டியோகிராம் மற்றும் அவசியமாயிருக்கிற வேறெந்த குறிப்பான சோதனைகளும் உட்படலாம்.

 

C.  மருந்துகள்:

         அறுவைச் சிகிச்சைக்கு முன்பான 7-14 நாட்களில் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுப்பதை நிறுத்துமாறு உங்கள் அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். எந்தவொரு மருந்தையும் கைவிடுவதற்கு முன்பாக உங்கள் சிகிச்சை மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

 

D.மற்ற ஆரோக்கியம் தொடர்பான நிலைமைகள்:

அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக உங்கள் பற்களுக்கான சிகிச்சை  முடித்துக் கொள்ளப்பட வேண்டும்.

ஏனென்றால்- தொற்றுநோயுள்ள பல் அல்லது ஈறு- புதிய இடுப்பில் தொற்றுநோயை ஏற்படுத்தலாம்.

 

 

உங்களுக்கான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை:

     வழக்கமான இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை சுமார் 2-3 மணி நேரங்கள் எடுக்கலாம்.

 

      அறுவைச் சிகிச்சை நடைமுறையை வலியில்லாமல் ஆக்குவதற்கும், உங்களுக்கு சௌகரியமானதாக இருக்கச் செய்வதற்கும் அறுவைச் சிகிச்சைக்கு முன்பாக மயக்க மருந்து கொடுக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் உங்கள் மேல் தொடையில் தேவையான அளவுக்கு துவாரமிடுகிறார்.

 

     அதன் பிறகு உங்கள் தோலுக்கு அடியிலுள்ள பிணைப்புத்தசைகள் மற்றும் தசைகளை தனித்தனியாக பிரிக்கிறார்.அதன் பிறகு அந்த அறுவைச் சிகிச்சை நிபுணர் சாக்கெட்டிலிருந்து தொடை எலும்பின் தலைப் பகுதியை பந்து கிண்ணத்திலிருந்து தனியாக பிரித்தெடுக்கிறார்.

  

  அந்த கிண்ணப் பகுதியிலிருந்து குருத்தெலும்பு நீக்கப்படுகிறது.மற்றும் அது செயற்கை உறுப்பு கிண்ணப் பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு  வடிவு படுத்தப்படுகிறது.புதிய செயற்கை உறுப்பின் இந்தப் பகுதி வளைக்கப்பட்டு பிளாஸ்டிக் அல்லது செராமிக் கொண்டு முலாம் பூசப்பட்டிருக்கிற ஒரு உலோகத் துண்டாகும்.

 

   தொடை எலும்பின் தலைப் பகுதியை வைப்பதற்காக,முதலில் தொடை எலும்பின் தலைப் பகுதி பொருந்தும் வகையில் அந்தத் தொடை எலும்பை துளையிட்டு தொடை எலும்புக்கான தலைப்  பகுதியை வைக்கிறார்.

         தொடை எலும்பின் தலைப்பகுதிக்கு மாற்றாக ஒரு உலோக அல்லது செராமிக் பந்து அந்த எலும்புத் தண்டுடன் இணைக்கப்படுகிறது.

     அந்த செயல்முறை முடிந்தவுடன் அறுவைச் சிகிச்சைக்கான உலோக தைப்புக் கம்பிகளை வைத்து தையல் போடவும். அது அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 10-14 நாட்களில் நீக்கப்படுகிறது.

 

மருத்துவமனையில் குணமடைதல்:

        அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு

    நீங்கள் எழுந்திருக்கும் வரை நலம்பெறும் அறையில் இருப்பீர்கள்.

                  உங்கள் புதிய இடுப்பைப் பாதுகாக்க உங்கள் முட்டிகளுக்கு இடையில் ஒரு தலையணை வைக்கப்படும்.

          இரத்த உறைவு ஏற்படும் ஆபத்தைக் குறைப்பதற்காக உங்கள் கால்களுக்கு உறைகள் வழங்கப்படும்.

 மருத்துவமனையில் தங்கியிருத்தல்

      மருத்துவமனையில் தங்கியிருப்பது 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கலாம்.

             உங்களுக்கு கொஞ்சம் வலி இருக்கும் எனவே வலிக்கான மருந்துகள் கொடுக்கப்படும். இது உங்கள் வலியை குறைத்து முடிந்தவரை சௌகரியமாக உணரச் செய்யும்.

             ஆரம்ப கட்டத்தில், நீங்கள் குணமடைவதற்காக அசைந்து செயல்படுவது முக்கியமானதாகும்.

அசைவது பின்வருபவைக்காக உதவும்:

           1. வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும்.

           2. நிமோனியா மற்றும் இரத்த உறைவுகள் ஏற்படுவதை தடுக்க உதவும்.

 

 

ஒரு இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அடுத்த நாளன்று உங்களை சந்தித்து மாற்றி வைக்கப்பட்ட இடுப்பில் நீங்கள் எவ்வளவு எடை போட வேண்டும் என்று உங்களுக்கு கற்பிப்பார்.

 

 நீங்கள் சுதந்திரமாக நடக்கவும்; நாற்காலி, கார் போன்றவற்றில் உட்கார்ந்து எழுந்திருப்பதற்காகவும்; மாடிகளில் ஏறி இறங்குவதற்காகவும் ஒரு ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதும் உங்களுக்கு கற்பிக்கப்படும்.

 

வீட்டில் குணமடைதல்

   மருத்துவமனையிலிருந்து வெளியனுப்பப்படும் போது, நடத்தல்,படுக்கையில் படுத்தல் மற்றும் எழுந்திரித்தல், கழிவறைக்கு செல்லுதல் ஆகிய செயல்பாடுகளை உதவியின்றி செய்வதற்கு கொஞ்சம் வலிமையைப் பெற்றிருப்பீர்கள்.

   உங்கள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிற படி மருந்துகளை நீங்கள் சரியாக எடுத்துக் கொள்கிறீர்கள்  என்பது முக்கியமானதாகும்.

       இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist )  வழிகாட்டப்பட்டியா படி  ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனம் உபயோகித்து நடப்பதை தொடருங்கள். எடையை தாங்கிக்கொண்டு முடிந்தவரை சௌகரியமாக நடங்கள், நடப்பது தசைகளை வலிமைப்படுத்தும்.

    மருத்துவமனையில் செய்து கொண்டிருந்ததைப் போல உடற்பயிர்ச்சிகளைத் தொடருங்கள்.

 

A. வீட்டுக்கு திரும்பிய பிறகு சௌகரியமாக இருப்பதற்கான குறிப்புகள்

   1. உங்கள் வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

   நீங்கள் ஊன்றுகோல் அல்லது நடப்பதற்கான சாதனத்தை கொண்டே நடப்பீர்கள் என்பதால், வீட்டைச்  நடப்பது, கடைக்கு செல்வது, சிறு தூரத்திற்கு நடந்து கொடுப்பது அல்லது குளிப்பது ஆகிய வேலைகளைச் செய்வதற்காக உங்களுக்கு

 

உதவி தேவைப்படலாம்.வீட்டுக்கு திரும்பிய பிறகு குணமடைவது சௌகரியமாக இருப்பதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.

   2.உங்கள் வீட்டை திட்டமிட்டு வைத்துக் கொள்ளுங்கள்

   நீங்கள் அறுவைச் சிகிச்சைக்காக செல்வதற்கு முன்னால் உங்கள் வீட்டை தயார்செய்து/ ஏற்பாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கம்பிவடங்கள் ஏதும் கீழே கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் படுக்கை அறை மாடியில் இருந்தால், உங்கள் முன் அறையிலேயே படுத்துக் கொள்வதற்காக ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். இது தினமும் நீங்கள் மாடி ஏறுவதை தவிர்க்க உதவும்.

உங்கள்  இடுப்பு உண்மையான இடுப்பை விட எப்படி வித்தியாசமானது?

பிரச்சனை எழுவதற்கு முன்பாக உங்களால் செய்ய முடிந்ததை விட அதிகமாக செயல்படுவற்கு உதவாது.

   புதிய இடுப்பைப் பெற்ற பிறகு எஞ்சியிருக்கும் உங்களுடைய வாழ்க்கை முழுமைக்கும், காலையில் ஊடுதல் மற்றும் அதிக-தாக்கம் உள்ள விளையாட்டுகளை விளையாடுதல் உட்பட சில செயல்பாடுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியதிருக்கலாம்.ஏனென்றால் அது மூட்டு இட மாறிவிடுவதற்கு  கொண்டு செல்லக்கூடும். இது பற்றி தங்களுக்கு அறுவை செய்த மருத்துவர் அறிவுரை செய்வார்.

 

 நீங்கள் குணமடையும் போது செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை

   நீங்கள் செய்யவேண்டியவை

    1. மருத்துவர்களால் கூறப்பட்டுள்ள படி உங்கள் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

         2. உங்கள் அறுவைச் சிகிச்சை நபர் வேண்டாம் என கூறும் வரை உங்களுக்கான வெள்ளை கால் உறைகளை அணிந்து கொள்ளுங்கள்.

        3.அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை சுத்தமாகவும் உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ளுங்கள்.

       4.வெட்டப்பட்ட இடத்தில் வீக்கம்,வலி, சிவந்திருத்தல் அல்லது சீல் வடிதல் ஆகியவை இருந்தால் அல்லது காய்ச்சல் இருந்தால் உடனடியாக உங்கள் மருத்துவருக்கு தெரிவியுங்கள்.

       5. கட்டுப் போடும் போது, முதலில் அறுவைச் சிகிச்சை செயப்பட்ட இடத்திற்கு கட்டு போடவும்.

    

 

நீங்கள் செய்யக்கூடாதவை

        1. 90 degree கோணத்திற்கு மேல் க்கு இடுப்பை வளைக்காமல் வாழ்க்கையில் நமது வேலைகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்று இயன் முறை  பயிற்சிப்பாளர் (physiotherapist ) கற்பிப்பார்

        2.உங்கள் புதிய இடுப்புக்கு மேல் உயரமாக முழங்காலை தூக்காதீர்கள்.

        3.முழங்காலை அல்லது கணுக்கால்களை பிணைத்து வைக்காதீர்கள்.

        4.எடை பளு தூக்குவதை தவிர்க்க வேண்டும்.

        5.அறுவைச் சிகிச்சைக்கு பின்பான முதல் 12 வாரங்களுக்கு கடினமான வீட்டு வேலைகள் அல்லது தோட்ட வேலைகளை தவிர்த்திடுங்கள்.

        6.முட்டி போடுவதை தவிர்க்கவும்.

        7.குளியல் தொட்டியில் உட்காராதீர்கள்.

       8.வழக்கமான கழிவறையை உபயோகிக்காதீர்கள்; அது கீழாக இருக்கிறது எனவே அது பாதுகாப்பற்றது. Toilet seat raise என்ற ஒரு மாறுதலை வழக்கமாக உபயோகிக்கும் வெஸ்டர்ன் டாய்லட்டிற்கு செய்து உபயோகிக்க வேண்டியதின் அவசியத்தை தங்களுக்கு மருத்துவம் புரிய வைப்பார். இந்தியன் டாய்லட் முறையில் கழிவறை உபயோகிப்பது தவிர்க்க வேண்டிய ஒன்றாகும்             

prophylactic surgery in Orthopaedics? Article by dr Chockalingam எலும்பு மூட்டு மருத்துவத்தில் முன் பாதுகாப்பு அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது

 click on this link👇👇


Prophylactic orthopaedic surgery (kauveryhospital.com)



👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.  (Click ) செய்யவும் 

paediatric car safety, article by dr chockalingam நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி குறிப்பு மருத்துவர் சொக்கலிங்கம் எழுதியது


 click on this link👇👇






 Paediatric Car Passenger Trauma – A Case Report and A Review of Child Safety Inside a Car ~ Dr S. Chockalingam (kauveryhospital.com)


👆👆மேலே உள்ள இணைய தளத்திற்கு சென்று பார்க்கவும்.  (Click ) செய்யவும் 



kindly go through this article which highlights the importance of child safety while travelling in a car



Friday, February 24, 2023

muscle bone and joint information in tamil

 Musculo skeletal system in tamil


மனித உடல் ஒரு விந்தையான மற்றும் மனிதனின் மிக அதி நவீன  முன்னேற்றங்களை ஒன்றுமே இல்லை என்று சொல்ல கூடிய ஒரு கடவுளின் படைப்பாகும். இந்த உடல் விலங்கு செல்கள்  (cells) சேர்ந்த பல திசுக்களினால் ஆகிய உறுப்புகளை கொண்டது. பல உறுப்புகள் சேர்ந்து ஒரு குழுவாக இயங்கும் அமைப்புகள் (systems) பல கொண்டது.


உதாரணத்திற்கு, இருதயமும், இரத்த நாளங்களும் ஒரு அமைப்பாக "cardio vascular system" என்று ஆங்கிலத்தில் குறிப்பிட படுகிறது. இந்த அமைப்பு இடை விடாது இரத்த ஓட்டத்தின் மூலம் அனைத்து இருப்புகளுக்கும் oxygen என்ற பிராண வாயுவை கொண்டு சேர்த்து carbon di oxide என்ற கரிய மில வாயுவை நுரையீரல் உதவியுடன் வெளியேற்றுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு அணுக்களாகிய வெள்ளை அணுக்கள் கொண்டு சேர்த்து கிருமிகளிடம் இருந்து திசுக்களை பாதுகாக்கிறது. திசுக்களை சரி செய்ய, எலும்பின் நடுவில் உள்ள marrow என்ற மஜ்ஜையில் இருந்து மூல பொருட்களையும் கொண்டு சேர்க்கிறது.


நுரையீரல் சுவாச அமைப்பு, மூளை நரம்பு அமைப்பு, உணவுப்பை குடல் அமைப்பு போன்ற பல, "autonomic systems என்று சொல்ல கூடிய தானியங்கும் அமைப்புகளால் உடல் இயங்கி வருகிறது. இவை நமது சிந்தனைகள் மற்றும் கட்டளைகள் மூலம் இயங்காது. தானாகவே நம் உயிர் உள்ள வரை இயங்கும். கண், மூக்கு, காது , நாக்கு, உணர்வு, என்ற ஐம்பொறிகள் மற்ற உலக சிந்தனை நியதிகளுக்கு அடிமை பட்டும், நம் சிந்தனை கட்டளைகளுக்கு ஆட்பட்டும், தானியங்கியும் வருகின்றன.


ஆனால், தசை, எலும்பு மூட்டு அமைப்பானது (musculo skeletal system ) இதற்கு ஒரு விதி விலக்காகும். இந்த அமைப்பானது, தானியங்காது. நம் சிந்தனைக்கும், கட்டளைகளுக்கும், ஏற்ப இயங்கும் voluntary system என்று சொல்ல கூடிய தன்னார்வ அமைப்பாகும். இவை நம்மிடம் கட்டளையை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறது. இந்த அமைப்பை சற்றும் விரிவாக பார்ப்போம். 


இந்த அமைப்பின் முக்கிய பாகங்கள் எலும்பு, மூட்டு, தசை ஆகும். 


1. எலும்பு 


எலும்பின் உள் பாகம் ஒரு தனி அமைப்பாகும். இது, bone marrow கொண்ட hematopoietic system என்ற அமைப்பாகும். எலும்பின் கட்டமைப்பு, ஒரு கட்டிடத்தின் எஹ்கினால்(steel) வலுவூட்டப்பட்ட சுவர் பூச்சு (concrete) போன்ற உறுதியான ஒரு உறுப்பு ஆகும். இது நம் எடையை தாங்கியும், மூட்டின் பாகமாகியு ம், தசைகளுக்கு ஆதாரமாகியும், முக்கிய உறுப்புகளை பாத்து காத்தும் வருகிறது.


2. மூட்டு 


மூட்டும் என்பது இரண்டு அல்லது இரண்டுக்கின் மேல் எலும்புகள் சேருமிடம் ஆகும். இந்த மூட்டின் வேலை அசைவு கொடுப்பது ஆகும். எலும்பின் முடிவு பகுதி cartilage என்ற குருத்து பூச்சினால் ஆனது. இந்த கார்டிலேஜ் வழ வழப்பாக இருந்து தாழ்ந்த உராய்வோடு அசைவுக்கு வழி வகுக்கிறது. இது உறுதியானதும் கூட. குதிப்பது, ஓடுவது, விளையாடுவது, பாரம் சுமப்பதை தாங்கும் திறன் கொண்டது.  மூட்டின் அசைவுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் ligaments என்ற திசை நார்களும், meniscus (பிறை உருவ திசு) போன்ற திசுக்களையம், lubricating oil (மசகு எண்ணை) ஒத்த திரவம், ஆகியவை மூட்டின் வேலையை சீராக்குகின்றன.


3. தசை

தசைகள் என்பன “சுருங்கி எலும்பை இழுத்தும், விரிந்து கொடுத்து எலும்பை தளர்த்தியும்”மூட்டுகளில்

 அசைவு ஏற்படுத்துகின்றன.

இந்த அசைவுகள் மூலமே மனிதனின் வாழ்க்கை பண்படுகிறது. நடப்பது, கை கூப்பி வணக்கம் கூறுவது, வேலைகள் பல செய்வது போன்றவை இயல்பாக நடக்க,பல தசைகள் வேலை செய்கின்றன.


இவ்வாறாக நமது தன்னாற்வு அமைப்பாகிய தசை எலும்பு மூட்டமைப்பை நாம் எவ்வாறாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறிது பார்ப்போமா.


இந்த அமைப்பின் அத்தனை பாகங்களும் உபயோகத்தில் உள்ள வரை பிரச்சினைகள் இன்றி இயங்கி வரும். தன்னார்வினால் தொடர்ந்து எந்த ஒருவர் இந்த அமைப்பின் பாகங்களை இயக்கி வருகிறாரோ அவர், இந்த அமைப்பின் நோய் நொடிகளின்றி வாழ்ந்து வருவார்.


எவ்வாறு இதை செய்வது? 


1. நம் வழ்க்கையில் தினம் இன்றியமையாத செயல்களை திறன்பட செய்வது, உதாரணமாக நன்கு உடலின் அனைத்து பாகங்களையும் சேர்த்து குளிப்பது.

2. வேலை பார்க்கும் செயல்கள், உதாரணமாக  

 மேற்பார்வையாளராக வேலை செய்பவர் “எழுந்து நடந்து குனிந்து நிமிர்ந்து” செயல்படுவது

3. பொழுது போக்கு மற்றும் விளையாட்டு ஈடுபாடுகள் முலம் அசைவு பயிறசிகள், உதாரணமாக  பூப்பந்து கைபந்து போன்றவை, நடை பயிற்சி, யோகா பயிற்சி

Sunday, February 19, 2023

don't shy away from bone and joint pain, deal with it and how?

தசை எலும்பு மூட்டு மண்டல பிரச்சினைகளை எதிர் கொள்வது எப்படி 


இந்த அமைப்பின் பாகங்களான தசை, தசை நார், எலும்பு, மூட்டு ஆகியவை பிரச்சினைகளின் முதல் அறிகுறியாக, வலி கொடுக்கின்றன. வலி கொடுத்த விடன், நாம் நம் அசைவையும் நம் இயக்கத்தையும் குறைத்து வழியில் இருந்து விடுபட்டு கொள்கிறோம். இதனால் வலி குறைந்து விடுகிறது. இதனால் நாம் பிரச்சினைகளில் இருந்து விடு பட்டு விட்டோம் என்று செயற்க்கையாக நம்ப தொடங்கி விடுகிறோம்.


நடு  தர வயதினர் பலர் இயல்பாக கருதப்படும் தினசரி வேலைப்பாடுகள் கூட செய்யாமல் இதனால் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தரையில் உட்காருவதில்லை, தினசரி நடப்பதில்லை, குனிந்து நிமிர்ந்து செயல் பாடுகள் ஈடுபடுவதில்லை. குழந்தைகள் பலர் உடல் பருமன் ஏற்பட்டு, சுகாதாரம் குறைந்து காண படுகின்றனர்.


இந்த அமைப்பில் வலி ஏற்படுவது முக்கால்வாசி அளவுக்கு மேல், நமது வாழ்க்கை முறை குறைப்பாடுகள் தான் காரணமாகும். முடக்கு வாதம், தைராய்டு மற்றும் வைட்டமின் D குறைபாடுகள், நோய் கிருமிகள் தாக்கம், மரபணு குறைபாடுகள், அடி பட்டு பின் விளைவுகளாக ஏற்படும் குறைபாடுகள், வயதாகி வரும் உபயோக நோய்கள்  என்று பல தரப்பட்ட காரணங்கள் வலிக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு.


ஆகவே, நாம் நமது தசை, எலும்பு, மூட்டு அமைப்பை தினம் உபயோகப்படுத்தி, வலி ஏற்பட்டால், நமது அசைவையும் செயல் பாடுகளை சுத்தமாக குறைப்பதை தவிர்த்து, இயன் முறை பயிற்சிகளில் ஈடுபட்டு, ஆரோக்கியத்தோடு இருப்பது அவசியம். தொடர்ந்து வலி மாத்திரைகளை சாப்பிடுவது தவிர்த்து, தகுந்த மருத்துவத்தை நாடுவதே சிறந்ததாகும். 


திருவள்ளுவர் கூறியது போல் " நோய்  நாடி" " நோய் முதல் நாடி", தகுந்த காரணம் கண்டு அதற்கு, " அது தணிக்கும் வாய் நாடி" வைத்தியம் செய்வதே தகுந்த மருத்துவமாகும்.

The importance or benefits of regular exercises

இவ்வாறாக செய்யும் உடல் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகள் பல 


தகுந்த கால இடை வெளியோடு செய்யப்படும் உடல் பயிற்சியானது 

 

1. நமக்கு மன மகிழ்ச்சியை  கொடுக்கிறது 


2. நமது உடலில் சில நோய்கள் வராமல் மற்றும் வந்த நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


3. நோயில்லா தசை மூட்டில் ஏற்படும் வலியை தவிர்க்க உதவுகின்றது.


4. நன்கு தூக்கம் வர வழி செய்கிறது.


5. உடல் எடையை தகுந்த அளவோடு வைத்திருக்க உதவுகின்றது 


6. நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியோடு இருக்க வைத்திருக்கின்றது.


7. சூரிய ஒளியின் அடியில் செய்யப்படும் போது, வைட்டமின் D தயாரிக்கப்பட்டு, உடல் அணுக்கள் அனைத்தும் நன்றாக செயல் பட உதவுகின்றது.


8.தோல் நோய் வருவதை தடுக்கின்றது.


9. மூளை திறன் அதிகரிக்கின்றது.

the types or methods of physical exercises

உடற் பயிற்சிகளின் அவசியமும் மற்றும் எவ்வாறு உடல் பயிற்சிகள் செய்வது 


 நம் உடலில் உள்ள தசை எலும்பு மூட்டு மண்டலத்தை, இருதயம் போன்ற மற்ற  தானியங்கி அமைப்புகள் போல் இல்லாமல் நாம் தன்னார்வத்தினால் உபயோகிக்க வேண்டியதாகும். நாம் இந்த அமைப்பை கால அளவு அதிகம் விடாமல் உபயோகிக்காமல் இருந்தால், எலும்பு, தசை, மூட்டின் செயல் திறன், கால போக்கில் குறைந்து எலும்பு மூட்டும் தசை பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, மூட்டு தேய்மானம், தசை தளர்வுகள், மூட்டு அசைவு குறைபாடுகள் ஆகியவை ஆகும்.


உடல் பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும் 


உடல் பயிற்சிகளானவை பல தரப்பட்டவையாகும் 


1. பளு அல்லது திறன் அதிகரிக்க செய்யும் பயிற்சிகள். இவை தசை பருமனை அதிகரித்து நாம் செயல் செய்தலை எளிதாக்கிறது. இதை Muscle strengthening exercises என்று ஆங்கிலத்தில் கூறலாம். உதாரணமாக, நாம் பளு தூக்கி தசைகளுக்கு பயிற்சி கொடுப்பது.வயதாக ஆக, நாம் நமது தசை அளவை இழக்க நேரிடுகிறது. இந்த பயிற்சியின் மூலம் நாம் இந்த இழப்பை குறைத்து, நமது உடலை இளமையாக வைத்து கொள்ள உதவுகின்றன. 


2. மூட்டு இலகு அதிகரிக்கின்ற பயிற்சிகள். இது flexibility exercises ஆகும். நம் உடல் மூட்டுகள் மூலம் முழு அசைவு ஏற்படுத்தி நம்மை மூட்டு வலி மற்றும் தேய்மானத்தை தடுக்கும் பயிற்சிகள் ஆகும். உதாரணமாக, யோகா பயிற்சிகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இதனால் நம் தசை பிடிப்பு, மற்றும் முதுகு பிடிப்பு,ஆகிய நோய்களிலில் இருந்து பாதுகாக்கப்பட இயல்கிறது.


3. Endurance training:  இந்த பயிற்சி, நமது தசை மற்றும் இருதயத்தின் ஆற்றலை அதிகரித்து, அதை அவசர  தேவைக்கு  தயார் செய்வதாகும். 

உதாரணமாக, சைக்கிள் ஓட்டுதல் கால் தசைகளுக்கு பலம் கொடுப்பது மட்டும் இல்லாமல் நமது இருதயம் மற்றும் கால் தசைகளின் ஆற்றலை அதிகரிக்கிறது. 


4. balance training: இது சமநிலை பயிற்சியாகும். இதை நாம் யோகா, மற்றும் tai Chi பயிற்சிகள் மூலம் அடையாலம்.இதனால், நாம் தடுமாற்றம் அடைந்து விழுதல், மற்றும் தசை பிடிப்பு ஏற்படுதல்  ஆகியவை குறைக்கலாம்.



நமக்கு நம் வாழ்க்கையில் வேலை பளு இன்றி சுதந்திரமாக உள்ள நேரம் குறைவாக உள்ளது. எவ்வாறு இப்பயிற்சிகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முடியும்? நம் தினசரி வாழ்க்கையையே உடல் பயிற்சிகளுக்கு உகந்ததாக செயல் படுத்தி கொள்ள முடியும். உதாரணமாக, கடைக்கு செல்ல இயந்திர வாகனம் உபயோகிப்பதை தவிர்த்து, மிதி வாகனம் அல்லது நடந்தோ செல்ல ஒருவரால் இயலும். இதன் மூலம், தசை திறன் அதிகரிப்பது மட்டும் இல்லாமல் இருதயம் ஆரோக்கியத்தினுடன் இருக்கும். நமது வீடு வேளைகளில் சுத்தம் செய்வது கை, முழங்கை, தோல் பட்டை பயிற்சிகளாக நாம் வேண்டும்.

"quality of life" and "physical muscle, bone and joints health"

வாழ்க்கைத்தரமும் நமது உடல் ஆரோக்கியமும்.


 வாழ்க்கைத்தரம் என்பது ஒருவருடைய அல்லது ஒரு நாட்டினுடைய மதிப்பீடாக அமைந்து உள்ளது. இது standard of living என்று ஆங்கிலத்தில் சொல்ல படுகிறது. வாழ்க்கைத்தரம் என்பது என்பது நமது வருமானத்தையோ, வசதிகளையோ வைத்து மட்டும் நிர்ணயிப்பதில்லை. நமது உடல் மற்றும் மன நலமின்மை ஆகியவை இந்த வாழ்க்கைத்தரம் வெகுவாக கீழ்நோக்கி சரிய வைத்து விடுகிறது. இந்த குறைபாடு, நமது quality of lifeஐ  பாதித்து நம்மை வாழ்க்கையில் முடக்கி நம் அத்யாவச வேலைகைளையும், பிற வேலைகளையும், பொழுது போக்கு விளையாட்டுகளையும், சமூக அத்யாவச நடமாட்டங்களையும் பாதிக்கிறது.


தம் உடல்  ஆரோக்கியம் இவ்வாறாக பாத்திருப்பதை வெகு சிலரே அறிந்து மருத்துவரிடம் தக்க சமயத்தில் வருகின்றனர். நம் உடல் ஆரோக்கியமாக உள்ளதா?


இப்போது, கீழே உள்ள 12 கேள்விகளை படிக்கவும்:


1. நீங்களாகவே ஆடையை அணிந்து கொள்கிறீர்களா?

2. எந்த வித உதவியின்றி கட்டிலிலிருந்து எழுந்திருக்க முடிகிறதா?

3. தண்ணீர் நிறைந்த டம்ளரை வாயருகே கொண்டு செல்ல முடிகிறதா?

4. கடை தெருவுக்கு சென்று வர முடிகிறதா?

5. எந்த வித உதவியின்றி உங்கள் உடம்பை சுத்தம் செய்து கொள்ள முடிகிறதா?

6. சாதாரண கழிவறையில் அல்லது தரையில் காலை மடித்து உட்கார முடிகிறதா?

7. கீழே குனிந்து துணிகளை எடுக்க முடிகிறதா?

8. தண்ணீர் குழாயை திறந்து மூட முடிகிறதா?

9.பேருந்து / ஆட்டோ இவைகளில் ஏறி இறங்க முடிகிறதா?

10. குறைந்தது 3 கிலோ மீட்டர் நடக்க முடிகிறதா?

11. காய்கறிகள் வாங்குவதற்கு செல்ல முடிகிறதா?

12. மாடிப்படிகளில் ஏறி இறங்க முடிகிறதா?


ஒரு ஆணோ பெண்ணோ தனது வாழ்நாளில் இந்த 12 செயல்பாடுகளை வலி இல்லாமல் செய்ய இயலவில்லை எனில், உடல் ரீதியில் அவரின் வாழ்க்கைத்தரம்  குன்றி இருப்பாதாக அறிந்து கொள்ளலாம். 


இவ்வாறாக, வாழ்க்கை தரம் குன்றி இருப்பதை நாம் அறிந்து, ஐயன் முறை பயிற்சியாளரிடமோ, எழும்பு மூட்டு மருத்துவரிடம் நமது எலும்பு மூட்டு பகுதிகளையும் நமது பொது உடல் சுகாரத்தினையும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

What is Vitamin D, information in Tamil language

வைட்டமின் டி என்றால் என்ன?


      வைட்டமின் ஆனது உடலுக்கு தேவையான அதிகப்படியான கூடுதல் சத்துக்கள் மற்றும் நாம் உண்ணும் உணவில் நிறைந்த சத்துக்கள் ஆகும். ஆனால் வைட்டமின் டி என்பது முற்றிலும் வைட்டமின் அல்ல. ஏனென்றால் நமது உடலில் வைட்டமின் டி சத்து உணவு மூலம் மட்டும் இல்லாமல், உடம்பின் தோல் மூலம் சூரிய ஒளியின், உதவியுடன் நாம்  இருந்து பெறுகிறோம்.


இந்த வைட்டமின் D உதவியுடன், நம்  எலும்புகள், தசைகள் வலு பெற்றும்,  உடலில் உள்ள Parathormone போன்ற மாற்று ஹார்மோன்களின் வேலைபாடுகள் சரியாக நடந்தும், நம் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது.


இந்த வைட்டமின் D குறைபாடுகளின் அறிகுறிகள் என்ன என்று சற்று இப்போது பார்க்கலாம்.


வைட்டமின் D குறைபாடுகளினால், உடல் தளர்ந்து சோர்வு ஏற்படுவது மக்களினிடையே சாரணமாக இருக்கிறது. எலும்பு தளர்ந்து, இலகுவாக எலும்பு உடைதல், வயதானவர்களில் காணப்படுகிறது. இந்த நோய்க்கு osteomalacia என்று பெயர் உண்டு.


வயதானவர்கள், தமது சாப்பாட்டின் அளவை குறைத்து வரும் பொழுது இவ்வாறான சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஆகையால் நாம் நமது சப்பாட்டின் அளவை குறைக்கும் பொழுது, சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த கால்சியம் அதிகம் உள்ள உணவுகள், பால், தயிர், பாலாடை, சோயா, எள், ராகி எனப்படும் கேழ்வரகு, மற்றும் மீன், முட்டை, நண்டு போன்ற அசைவ உணவுகளும் ஆகும். 


குழந்தைகளிடம் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்பொழுது அவர்களுக்கு எலும்புறுக்கி ( Rickets ) வர நேரிடும். இவற்றினால் குழந்தைகளுக்கு வலிமையற்ற எலும்புகள்,எலும்பு வளைதல், பாத நோய்கள், கால் வலி, பாத வலி மற்றும் பல விதமான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இன்றைய நடைமுறையல் மருத்துவர்களின் ஆராய்சியல் விதிப்படி பெரும்பாலான குழந்தைகள் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.


குழந்தைகள் பொருத்தமட்டில் சிறு வயதில் விளையாட்டுகளில் ஈடுபடுவது மிக முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு செயல்படுவதால் ஆரோக்கியமான உடல்கள் ,தசைகள்,மற்றும் வலிமையான எலும்புகளை பெறக் கூடுவார்கள்.உடம்பின் தோல் மேல் சூரிய வெளிச்சம் பட்டு, இயற்கையாகவே , வைட்டமின் D தயாரிக்கப்படுகிறதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாரதியார், சொல்லியது போல், "மாலை முழுவதும் விளையாட்டு" என்று வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.